Sunday, September 25, 2011

யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் 2011 ஆகஸ்ட் மாதத்திற்கான பிரதிநிதிகள் கூட்ட அறிக்கை

யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் 2011 ஆகஸ்ட் மாதத்திற்கான
பிரதிநிதிகள் கூட்ட அறிக்கை
2011 ஆகஸ்ட் மாதத்திற்கான பிரதிநிதிகள் சந்திப்பு புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு, முன்கூட்டியே 2011 ஜூலை 30ஆம் நாள் சனிக்கிழமை, யாழ் ஒஸ்மானியா வளாகத்தில் கூட்டப்பட்டது, நிகழ்வுகள் வழமையான நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே முன்னெடுக்கப்பட்டன,
ஆன்மீக உரை:
ஆன்மீக உரையில் செயலளார், நாம் எதற்காக ஆன்மீக உரை நிகழ்த்துகின்றோம் என்பதை தெளிவுபடுத்தினார், கூட்டமைப்பு, ஐக்கியம் என்பவற்றின் முக்கியத்துவம் குறித்துக்கூறி, மக்கள் பிரதிநிதிகளாகவே நாம் இவ்விடத்திற்கு வருகின்றோம், எமக்கிடையே முரண்பாடுகள் இருக்கின்றன, ஆனால் அதனை அடிப்படையாக வைத்து நாம் பிரிவினைக்கு துணைபோவதில்லை, மக்களின் உணர்வுகளை, சிந்தனையினை ஒருமுகப்படுத்தி ஒரே அமைப்பை ஏற்படுத்துவதற்கே இந்த ஆன்மீக உரை நிகழ்த்தப்படுகின்றது என்ற கருத்தைக்கூறி, சம்மேளனக்கூட்ட மரபுகளில் ஆன்மீக உரை தொடர்ந்தும் இருக்கும் என்ற கருத்தை வலியுறுத்தினார்.
தலைமை உரை:
தலைமை உரையில் சம்மேளனத்தின் இதுவரைகால செயற்பாடுகள் குறித்து சுருக்கமாக கூறிய தலைவர், அனைவரது ஒத்துழைப்புக் குறித்தும் வலியுறுத்தினார்.
2நிமிட துஆப் பிரார்த்தனை: இவ்விடத்தில் சகோதரர் எம்.ஜீ பஸீர் அவர்கள்: முன்னை நாள் மாநகர சபை உறுப்பினர் பாட்சா மொஹிதீன் அவர்கள் வபாத்தாகிவிட்டதாகவும் அவர்கள் சமூகத்திற்காக பணிசெய்த நல்ல சமூகசேவையாளர் என்றும் தெரிவித்து அவருக்கு மரியாதை செய்யும் முகமாக 2நிமிட துஆ பிரார்த்தனைக்கு சபை இடமளிக்கவேண்டும் எனக்கேட்டுக்கொண்டார், அதற்கமைவாக முன்னை நாள் மாநகர சபை உறுப்பினர் பாட்சா மொஹிதீன் அவர்களின் மறுமை வாழ்வு சிறப்பாக அமைய வேண்டி 2நிமிட துஆப் பிரார்த்தனைக்கு நேரம் வழங்கப்பட்டது.
சென்ற கூட்ட அறிக்கை: அதனைத் தொடர்ந்து சென்ற கூட்ட அறிக்கைக்கான நேரம் ஒதுக்கப்பட்டது, நேர விரயம் காரணமாக சென்ற கூட்ட அறிக்கையின் பிரதிகள் சபையோருக்கு வழங்கப்பட்டு அவை சபையோரால் வாசிக்கப்பட்டு பின்னர் திருத்தங்கள் இருப்பின் அவற்றை மேற்கொள்ளும் நடைமுறை குறித்துப் பேசப்பட்டது. பின்னர் சென்ற கூட்ட அறிக்கை சபையின் ஆரம்பத்திலேயே படிக்கப்படுதல் சிறப்பானது அப்போதுதான் கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் குறித்து சபைக்கு தெளிவு ஏற்படும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. அதன்பிரகாரம் சென்ற கூட்ட அறிக்கை சபையில் செயலாளரால் படிக்கப்பட்டது.
சபையில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் யாரால் முன்வைக்கப்பட்டது என்ற விபரங்கள் அறிக்கையில் இடம்பெறவேண்டும் என்ற கருத்தை சகோ.முபீன் வலியுறுத்தினார்,
எனினும் முன்னைய சம்மேளனக் கூட்டங்களில் அவ்வாறு கருத்துக்களைக்கூறிய அனைவரினதும் பெயர்கள் இடம்பெறுவது தனிநபர் விளம்பரத்துக்கு வழிசெய்யும் என்பதோடு குறைகுற்றங்கள் காணக்கூடிய நிலையும் தோன்றும் எனக் கூறப்பட்டதை செயலாளர் ஞாபகமூட்டினார்.
சகோதரர் அஸ்கர் அவர்கள் கருத்துக் கூறும்போது சம்மேளனத்தின் பொது உறவு சார்ந்த செயற்பாடுகள் பல  சம்மேளனப் பிரதிநிதிகளுக்கு தெரியாத நிலை தொடருவதாகவும், கொழும்பில் இடம்பெற்ற சந்திப்புகள் குறித்து தமக்கு அறியத்தரப்படவில்லை என்றும், தெரிவித்தார். அத்தோடு அமைச்சர் றிசாத பதியுத்தீன், பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுடனான சந்திப்பு என்பன குறித்தும் நாம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். அத்தோடு சாவகச்சேரி பிரதேசம் கவனத்தில் எடுக்கப்படவேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்தினார்.
திருத்தப்பட்ட அறிக்கையினை சகோ.முபீன் சரியெனப்பிரேரிக்க அதனை சகோதரர் எம்.ஜீ.பஸீர் வழிமொழிந்தார்.
சிறீலங்கா இஸ்லாமிய நிலையம், மற்றும் நீதியமைச்சின் பிரதிநிதிகளின் விஜயம் தொடர்பாகவும் சகோ.முபீன் சபையோருக்கு விளக்கமளித்தார், அதன்போது அவர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள், வாக்குறுதிகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது, 200 வீடுகளை திருத்தியமைத்தல், 100 வீடுகளை புதிதாக அமைத்தல், உடனடியான நிவாரனங்கள், பிரதேச செயலாளரினால் தோற்றுவிக்கப்படும் தடைகள் குறித்தும் தாம் கவனம் செலுத்துதல் போன்றன அவற்றுள் முக்கியமானவையாகும்.
காணி உறுதி தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் : அத்தோடு காணி உறுதி தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் நிலவுகின்றன, குறிப்பாக சட்டத்தரணி மன்சூர் அவர்களினால் பதியப்பட்ட காணி உறுதிகள் இன்னும் காணிப்பதிவாளர் திணைக்களத்தில் பதிவு செய்யப்படாத நிலை இருக்கின்றது எனவே காணி உறுதி தொடர்பான பிரச்சினைகளை கேட்டறியும் விண்ணப்பம் ஒன்றினை விநியோகித்து அதனடியாக காணிசார்ந்து நிலவும் பிரச்சினைகளைக் கண்டறிந்து நீதியமைச்சின் மூலமாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது பொறுத்தமானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. மேற்படி கருத்தின் அடிப்படையில் செயற்படுதல் எனத் தீர்மானிக்கப்பட்டது.
கிளிநொச்சி பள்ளிவாயல்கள : அடுத்து கிளிநொச்சி பள்ளிவாயல்கள் விடயமாகப் பேசப்பட்டது, அதிலும் குறிப்பாக கரடிப்போக்கு பள்ளிவாயல் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது, அதனடிப்படையில் சகோதரர் முபீன், அல்-ஹாஜ் நியாஸ், சட்டத்தரனி றமீஸ் ஆகியோர் கொண்ட குழுவை சம்மேளனம் கரடிப்போக்கு பள்ளிவாயல் விடயமாக கவனம் எடுக்கும்படியும், தேவையேற்படின் தமது குழுவுடன் மேலும் இரு கிளிநொச்சி வாசிகளை இணைத்துக் கொள்ளும்படியும் தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் குறித்த உபகுழு கரடிப்போக்கு பள்ளிவாயல் விடயத்தில் கவனம் செலுத்தி அடுத்த சம்மேளனக்கூட்டத்தில் அறிக்கையொன்றினை சமர்ப்பிக்கும். இன்ஸா அல்லாஹ்.
புனித றமழான் மாத நிகழ்வுகள்:
அடுத்து புனித றமழான் மாத நிகழ்வுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
நோன்புகால கஞ்சி வழங்குதல் தொடர்பாக பின்வரும் ஒழுங்கு கடைப்பிடிக்கப்படும் எனத்தெரிவிக்கப்பட்டது.
•    பெரிய பள்ளிவாயல் – பள்ளிவாயலுக்கு நோன்புதிறக்க வருவோருக்கும் புதிய முஸ்லிம்களுக்குமாக கஞ்சி, இப்தார் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
•    சின்ன மொஹிதீன் பள்ளிவாயல் –பள்ளிவாயலில் 50பேருக்கான இப்தார் ஏற்பாடுகளுடன் மஹல்லாவாசிகளுக்கான கஞ்சி விநியோகம்
•    பெரிய மொஹிதீன் பள்ளிவாயல் - பள்ளிவாயலில் 50பேருக்கான இப்தார் ஏற்பாடுகளுடன் மஹல்லாவாசிகளுக்கான கஞ்சி விநியோகம்
•    செவல பள்ளிவாயல் ; பள்ளிவாயலுக்கு நோன்புதிறக்க வருவோருக்கு இப்தார் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
•    காமால் பள்ளிவாயல்: பள்ளிவாயலில் 50பேருக்கான இப்தார் ஏற்பாடுகளுடன் மஹல்லாவாசிகளுக்கான கஞ்சி விநியோகம்
•    முஹம்மதியா மஸ்ஜித் பள்ளிவாயலில் 50பேருக்கான இப்தார் ஏற்பாடுகளுடன் மஹல்லாவாசிகளுக்கான கஞ்சி விநியோகம்
•    மஸ்ஜித் அபூபக்கர்- புதிய சோனகர் தெரு- மஹல்லாவாசிகளுக்கான கஞ்சி விநியோகம் மட்டும்
•    பஸார் பள்ளிவாயல்: பள்ளிவாயலில் 50பேருக்கான இப்தார் ஏற்பாடுகளுடன் மஹல்லாவாசிகளுக்கான கஞ்சி விநியோகம்
அத்தோடு விசேட இப்தார் நிகழ்ச்சிகள் புதிய முஸ்லிம்களுக்காகவும், நல்லிணக்க அடிப்படையில் முஸ்லிமல்லாதோருக்குமாகவும் இணைத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்பதாகவும் சபையில் தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்துக்கு வெளியில் யாழ்ப்பாண முஸ்லிம்களை ஒன்றுகூட்டுகின்றவகையில் இப்தார் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுவது சிறப்பானது, அந்தவகையில்
•    புத்தளத்தில் ஏற்பாடுகளை சகோ.அஸ்கர் அவர்கள் மேற்கொள்வார் என்றும்
•    நீர்கொழும்பில் செடே அமைப்பு மேற்கொள்ளும் எனவும்
•    கொழும்பில் புரொபெசனல் போரம் அமைப்பு மேற்கொள்ளும்
எனவும் தீர்மானிக்கப்பட்டது.
சாதரண இப்தார் ஒன்றிற்கு ரூபாய் 7000 வீதம் ஒவ்வொரு பள்ளிவாயலுக்கும் அவசியப்படுவதாக மதிப்பிடப்பட்டது.
அத்தோடு தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் குடும்பங்களுக்கான உலர் உணவு நிவாரணங்கள் வழ்ங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டது.
அடுத்து பெருநாள் தொழுகை தொடர்பாக பேசப்பட்டது, பள்ளிவாயல் நிர்வாகங்களை அழைத்து இது குறித்து 31 ஜூலை ஞாயிற்றுக்கிழமை காலை பெரியபள்ளிவாயலில் கலந்துறையாடுதல் என முடிவு செய்யப்பட்டது.

நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்
•    சென்ற கூட்ட அறிக்கை சபையின் ஆரம்பத்தில் படிக்கப்பட்டு அங்கீகாரத்துக்காக விடப்படும்
•    காணி உறுதிகள் சார்ந்த பிரச்சினைகளை கண்டறிய விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்தல்
•    கரடிப்போக்கு பள்ளிவாயல் விவகாரத்துக்கான மூவர் அடங்கிய குழு (சகோதரர் முபீன், அல்-ஹாஜ் நியாஸ், சட்டத்தரனி றமீஸ் )நியமனம்
•    புனித றமழான் கால விநியோகங்களுக்காக குடியிருப்பாளர் தகவல்களை ஒன்று சேர்த்தல், மற்றும் விண்ணப்பங்களை அனுப்புதல் செயலாளரின் பொறுப்பில் விடப்பட்டது.
•    அமைச்சர் றிஸாத் பதியுத்தீன் அவர்களை ஆகஸ்ட் 23-28ஆம் திகதிகளுக்கிடையில் சந்தித்தல்.
•    பெருநாள் தொழுகைதொடர்பாக பள்ளிவாயல் நிருவாகங்களை அழைத்து 31ஆம் திகதி பெரியபள்ளிவாயலில் கலந்துறையாடுதல்
போன்ற தீர்மாங்கள் சபையில் மேற்கொள்ளப்பட்டன.

No comments:

Post a Comment