Sunday, September 25, 2011

புனித நோன்புப் பெருநாள் தொடர்பான தீர்மானம்


புனித நோன்புப் பெருநாள் தொடர்பான தீர்மானம்
யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று அதாவது 31 ஜூலை 2011 அன்று காலை 9.00 மணியளவில் யாழ்ப்பாணம் பெரிய பள்ளிவாயலில் ஏற்பாடு செய்யப்பட்ட பள்ளிவாயல் நிர்வாகிகளுடனான ஒன்று கூடலில் பினவரும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன, அதனை பொதுமக்களின் கவனத்திற்கு தருகின்றோம்.
அல்லாஹ்வின் அருளால் நாம் எமது தாயக மண்ணில் மீளவும் குடியேறத் தொடங்கியுள்ளோம், அல்ஹம்து லில்லாஹ் ஒற்றுமையே பலம் என்பதற்கு அமைய எமது சமூக விவகாரங்கள் பல வற்றில் முற்போக்கான மாற்றங்கள் ஏற்பட்டு வருவதும் காணக்கூடியதாக இருக்கின்றது, அந்த வகையில் ஒரு பிரதேசத்தின் ஐக்கியத்தையும் ஒற்றுமையினையும் மேலும் வலுப்படுத்தும் நிகழ்வாகவே பெருநாள் தினங்கள் அமைகின்றன, இதனைக்கருத்திற்கொண்ட யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரத்தைச்சேர்ந்த பள்ளிவாயல் நிர்வாகிகள் பெருநாள் தொழுகைகளை ஐக்கியமாக ஒரே இடத்தில் நிறவேற்றுவதற்கு ஏகமனதாக உடன்பாடு கண்டுள்ளார்கள், அல்ஹம்துலில்லாஹ்.
அதன்பிரகாரம் ஹி1432 (2011) ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகை ஒஸ்மானியா கல்லூரி மைதானத்தில் இடம்பெறும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய பின்வரும் பொருப்புகள் பள்ளிவாயல் நிர்வாகங்களிடம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன
முழுமையான ஏற்பாடுகளுக்கான பொறுப்பாளர்களாக சகோதரர் முபீன் மற்றும் சகோதரர் ஜமால் மொஹிதீன் ஆகியோர் கடமையாற்றுவார்கள்
வுளூ மற்றும் நீர்விநியோக ஏற்பாடுகள் பெரிய பள்ளிவாயல் நிர்வாகம் (பொறுப்பாளர் சகோ. அல்-ஹாஜ் நியாஸ்)
தொழுகைக்கான மைதானத்தை தயார் செய்தலும், விரிப்புகளை ஏற்பாடு செய்தலும் மொஹிதீன் ஜும் ஆ  மஸ்ஜித் மொஹிதீன் பள்ளிவீதி பொறுப்பாளர் சகோ.அல்-ஹாஜ் பிர்தௌஸ்)
ஒலிபெருக்கி ஏற்பாடுகள் மொஹிதீன் ஜும் ஆ  மஸ்ஜித் மானிப்பாய் வீதி (பொறுப்பாளர் சகோ லாபிர்)
மறைப்பு ஏற்பாடுகள் மஸ்ஜித் அபூபக்கர், மற்றும் செவல பள்ளிவாயல் (பொறுப்பாளர்- மௌலவி அப்துல் அஸீஸ், சகோ.ஹஸ்ஸான்,)
சிற்றுண்டி விநியோகம் காமால் பள்ளிவாயல் (பொறுப்பாளர், சகோ.தாஹிர், சகோ. லாபிர், மௌலவி றொஷான்)
மிம்பர் மற்றும் முன்னரங்க ஏற்பாடுகள்- அல்லாப்பிச்சை மஸ்ஜித் ( பொறுப்பாளர் சகோ, கமால்)
செய்தி ஒலிபரப்பு, மற்றும் ஊடக விவகாரங்கள் (பொறுப்பாளர் சகோ.அஸ்மின் அய்யூப்)
மேற்படி முடிவினை எல்லாப்பள்ளிவாயல் நிர்வாகங்கள் சார்பாகவும் நாம் பொதுமக்களுக்கு அறியத்தருகின்றோம். சமூக நலன் கருதி மேற்கொள்ளப்பட்ட இத்தீர்மானத்திற்கு பொது மக்கள் அனைவரையும் ஒத்துழைக்கும்படியும் அதன் வெற்றிக்காக பிரார்த்திக்கும்படியும் வேண்டிக்கொள்கின்றோம்.
இவ்வண்ணம் அஷ்-ஷெய்க் அஸ்மின் அய்யூப்
பொதுச்செயலாளர்
யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம்

No comments:

Post a Comment