Sunday, September 25, 2011

யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் 2011 ஜூலை பிரதிநிதிகள் கூட்டம் – கிளிநொச்சி


யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம்
2011 ஜூலை பிரதிநிதிகள் கூட்டம் கிளிநொச்சி
03 ஜூலை 2011 ஏ.எச்.எம்.லொட்ஜ்- கண்டி வீதி கிளிநொச்சி

யாழ், கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் 6வது பிரதிநிதிகள் கூட்டம் கிளிநொச்சியில் 2011 ஜூலை 03 ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி .எச்.எம்.லொட்ஜ் வளாகத்தில் இடம்பெற்றது. 23 அங்கத்தவர்கள் கூட்டத்திற்கு சமூகம் தந்திருந்தனர், கூட்டத்தினை சகோ.ஜமால் தலைமை தாங்கினார், பின்வரும் விடயங்கள் நிகழ்ச்சி நிரலில் உட்படுத்தப்பட்டிருந்தது.
·         கிளிநொச்சி மக்களுடைய மீள்குடியேற்றம் சார்ந்த பிரச்சினைகள்
·         முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு
·         யாழ்,கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் வாக்களர் பதிவு
·         யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் ஒழுக்கக்கோவை மற்றும் பொருப்புக்களைப் பகிர்தல்
·         அடுத்துவரும் இரண்டு மாதங்களுக்கான தலைவர் தெரிவு
·         இதர  விடயங்கள்
முதன்மையாக கிளிநொச்சி மக்களுடைய நடைமுறைப் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது,
காணியில்லாத பிரச்சினை
கிளிநொச்சி மாவட்டத்தில், கிளிநொச்சி நகரம், கரடிப்போக்கு, திருநகர், வட்டக்கச்சி, நாச்சிக்குடா,போன்ற பகுதிகளில் செறிவாக வாழ்ந்துவந்தனர், 1990ல் அனைவரும் புலிகளினால் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டனர்,அதன் பின்னர் 2002ஆம் ஆண்டில் ஏற்பட்ட சமாதான உடன்படிக்கையினைத் தொடர்ந்து நாம் இங்கு வந்தபோது எமது காணிகளை புலிகள் சிறிய விலைகொடுத்து வாங்கினார்கள், இப்போது நாம் இங்கே வந்து மீளக்குடியேறுவதற்கு காணிகள் இல்லாத பிரச்சினைகள் இருக்கின்றது. எமது காணிகள் அனைத்தும் அரச  காணிகள் எனவே அவற்றை மீளப்பெறுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.
அரச நிவாரணங்களில் காணப்படும் குறைபாடுகள்
கிளிநொச்சி மாவட்டத்தில் 92 குடும்பங்கள் மீளக்குடியேறுவதற்காக பதிவுகளை மேற்கொண்டுள்ளனர் இவர்களுள் 72 குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன ஏனைய 20 குடும்பங்களுக்கும் நிவாரணங்களைப் பெற்றுக்கொண்டுள்ளதாக கையொப்பங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டபோதிலும் அவை இன்னும் கவனிக்கப்படாமல் இருக்கின்றன இது குறித்து கவனம் செலுத்தப்படவேண்டும்
பள்ளிவாயல்களை அமைத்தல்
கிளிநொச்சி மாவட்டத்தில் 6 பள்ளிவாயல்கள் இயங்கிவந்தன, அவற்றில் ஒன்று மட்டுமே இப்போது முழுமையான இயக்கத்தில் இருக்கின்றது ஏனைய பள்ளிவாயல்கள் உடனடியாக புனரமைக்கப்படவேண்டும், குறிப்பாக திருநகர் மற்றும் கரடிப்போக்கு ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிவாயல்கள் துரிதமாக புனரமைக்கப்படவேண்டும், இதனை கவனத்தில் எடுத்துக்கொண்ட சம்மேளனம் திருநகர் பள்ளிவாயலை உடனடியாக புனரமைக்கின்ற அமைப்புகளை ஏற்படுத்துவதற்கு உறுதிமொழி வழங்கியது.
முறிகண்டிப்பகுதியில் 30 ஏக்கர் காணியை முஸ்லிம்களிடையே பகிர்ந்தளிப்பதற்கான உடன்பாடு கிளிநொச்சி அரச அதிபருடன் எட்டப்பட்டுள்ளது இதனை சீரான அமைப்பில் மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்றும் கூறப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட பிரதிநிதிகளை சம்மேளனத்துடன் இணைத்துக்கொள்தல் தொடர்பாகவும் பேசப்பட்டது.
அடுத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு தொடர்பாக சம்மேளன அங்கத்தவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.அதில்: சம்மேளனம் சார்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்தும் எமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டது. சம்மேளனம் பின்வரும் 7 முக்கிய விடயங்களை கருத்தில்கொண்டு மீள்குடியேற்ற வேலைத்திட்டத்தை முன்னெடுகின்றது
1.  மீள்குடியேற்றம் குறித்த விழிப்புணர்வையேற்படுத்துதல்
2.  மீள்குடியேற்றத்திற்கான அரசபதிவுகள் மற்றும் வாக்காளர் பதிவு
3.  வீடுகளைத்திருத்தியமைத்தல், வீட்டுத்திட்டம்
4.  காணியற்றோருக்கான காணிகளைப்பகிர்ந்தளித்தல் மற்றும் புதிய வீட்டுத்திட்டம்
5.  தொழில்வாய்ப்பு மற்றும் வாழ்வாதார வசதிகளையேற்படுத்துதல்
6.  உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்
7.  கல்வி கலாசார விடயங்களில் கவனம் செலுத்துதல்
போன்றவையே எமது திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்படும். இத்தகைய திட்டங்களை நாம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைத்தோம், அவர்கள் இதனை மிகவும் சாதகமாக அணுகினார்கள் இதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் உத்தரவாதங்கள் தரப்பட்டன.இதனடிப்படையில் மீள்குடியேற்றத்திற்கான அரசபதிவுகள் மற்றும் வாக்காளர் பதிவு சார்ந்த விடயங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது பற்றி சபையோரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
நாம் எல்லோரும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் என்பதற்கு யாழ்ப்பாணத்தில் எமது வாக்காளர் பதிவே மிக முக்கியமானதும் அடிப்படையானதுமான அடையாளமாகும்.எனவே வாக்காளர் பதிவு குறித்து எமது சமூகத்திடம் விளக்கமளிக்கவேண்டிய தேவையிருக்கின்றது. எம்மிடம் ஆகக்குறைந்தது 5000 வாக்குகளாகவது இருக்குமாக இருந்தால் அது எமது பலமாகும், இது தேர்தல் அல்லது அரசியல் நடவடிக்கை என எவரும் தவறாக விளங்கிக்கொள்ளக்கூடாது, இதனை எமது சமுதாயத்தின் அடையாளமாகவே நாம் கணிக்கின்றோம், தேர்தல் காலங்களில் நீங்கள் எவரும் வாக்களிக்கலாம் அதற்கும் இதற்கும் தொடர்பில்லை என்பதை நாம் உணரவேண்டும். எனவே இவ்விடயமாக சபையில் பல்வேறு கருத்துகள் நிலவின
வாக்காளர் பதிவிற்காக நாம் மக்களை அழைத்தால் அவர்கள் அதற்கு செவிசாய்க்க மாட்டார்கள், மக்கள் எதையாவது எதிர்பார்க்கின்றார்கள் இன்னும் நாம் எதையும் மக்களுக்கு செய்யவில்லை, வாக்காளர் பதிவு பல நடைமுறைப்பிரச்சினைகளை உருவாக்கும், என ஒரு சாரார் கருத்துக்கூற
அடுத்த சாரார்: மக்களை நாம் சீரழித்துவிட்டோம், அவர்களை நல்ல சிந்தனையுள்ளவர்களாக நாம் நெறிப்படுத்தவில்லை வாக்களிப்பு உரிமை என்பது ஒரு உயர்வான அடிப்படை உரிமையாகும் இதனை நாம் மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கவேண்டும், யாழ்ப்பாணத்தில் அவர்களுக்கான வாக்காளர் பதிவு இருக்கின்றபோதுதான் அதற்கு ஒரு பெறுமதியிருக்கும் யாழ்ப்பாணத்திற்கு வெளியில் இருக்கும் வாக்களர்பதிவுகளால் எமது மக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை,வெறுமனே குழந்தைகளை பாடசாலைக்குச் சேர்ப்ப்தற்கு மட்டும்தான் அந்த உரிமை பயன்படுத்தப்படும், வேறு எந்த நன்மையும் ஏற்படாது.எனவே மக்களை நாம் விழிப்படையச் செய்யவேண்டும்.
இதனடிப்படையில் சம்மேளனத்தில் அங்கத்துவம் வகிக்கும் அரசியல் கட்சிகள் எந்த நிலைப்பாட்டினைக்கொண்டுள்ளன எனக்கேட்கப்பட்டது. அதற்கு பொதுவாக அரசியல் கட்சிகள் வாக்காளர் பதிவு குறித்துப் பேசினால் அது மக்களால் நிராகரிக்கப்படும் என்பதுடன் மக்களிடம் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கின்றது என்று கூறப்பட்டதுடன் அவர்கள் பொதுவாக ஊடக அறிக்கையொன்றினை வெளியிடுவதாக உடன்பாடு தெரிவித்தனர்.
காணிப்பிரச்சினை:
பறச்சேறிவெளி, தூக்குமரக்காடு, மற்றும் பொம்மைவெளிப்பகுதிகளில் காணப்படும் தனியார் காணிகளைக் கொள்வனவுசெய்து சகாயவிலையில் மக்களிடையே பகிர்ந்தளித்தல் என்ற அபிப்பராயம் தெரிவிக்கப்பட்டது, இது சபையின் அங்கீகாரத்தைப்பெற்றுக்கொண்டது.
கிளிநொச்சி முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை தொடர்பாக முறிகண்டியில் உள்ள காணி தொடர்பான தகவல்களைப்பெற்று அது சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்தல்
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு:
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் சந்திப்பு விடயத்தில் அமைச்சர் கௌரவ ரிசாத் பதியுத்தீன் அவர்களை எதிர்வரும் 13ஆம் நாள் சந்தித்தல், மற்றும் ஏனைய அமைச்சர்களையும் சந்திக்க ஏற்பாடு செய்தல்.
பிரதேச செயலாளர் விடயமாக:
யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் செயலாளர் கடுமையான முட்டுக்கட்டைகளை ஏற்படுத்துகின்றார், எனவே அவரது முட்டுக்கட்டைகளை உடனடியாக இல்லாமலாக்க வேண்டும் இதற்கு தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.அதன் ஒரு கட்டமாக எமது மாநகர சபை உறுப்பினர்கள் மாநகர சபையில் பிரதேச செயலாளருக்கு எதிரான ஒரு பிரேரனையினை முன்வைப்பார்கள் என முடிவு செய்யப்பட்டதுடன், வேறு மட்டங்களிலும் இது குறித்த முறைப்பாடுகளை மேற்கொள்தல் எனத் தீர்மானிக்கப்பட்டது.
வாக்காளர் பதிவு தொடர்பாக:
வாக்காளர்பதிவு தொடர்பாக முதற்கட்டமாக ஏற்கனவே பதிவு செய்த வாக்காளர்கள் யாழ் மாவட்ட வாக்காளர் இடாப்பில் பதியப்பட்டுள்ளதா இல்லையா என்பதை அவதானித்து, அவ்வாறு பதிவிலிடப்படாவிட்டால் அதனை சட்டரீதியாக அணுகுதல் சிறப்பானது என்ற கருத்தை சகோ, முபீன் சபையில் முன்வைத்தார், இதன் சாதக பாதகங்கள் குறித்து சபையில் கலந்துரையாடப்பட்டது, அதனைத்தொடர்ந்து மேற்படி விடயத்தை
சிறிலங்கன் வே, புத்தளம வாழ் யாழ்,கிளிநொச்சி மக்கள் ஒன்றியம் ஆகியன இணைந்து புத்தளம் பகுதியிலும், சமத்துவத்திற்கான யாழ் சிவில் சமூகம் யாழ்ப்பாணத்திலும் மேற்படி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றும் தீர்மானிக்கப்பட்டது, அத்துடன் இதற்கான இலவச சட்ட ஆலோசனைகளை சகோதரர் முபீன் பெற்றுத்தருவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து பின்வருவோர் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் சபைக்கான அங்கத்தவர்களாக உள்வாங்கப்பட்டனர்
1.  சகோதரர். சாஜஹான்
2.  சகோதரர் யூ.எல்.ஏ. வாஹித்
3.  சகோதரர் எம்.ஏ.எம்.சுபைர்
4.  சகோதரர் எம்.எஸ்.எம்.நாஸர்
5.  சகோதரர் ஏ.எச்.எம்.அய்யூப்
6.  சகோதரர் எம்.உவைஸ்
தொடர்ந்தும் சம்மேளன கூட்டங்களுக்கு வருகைதராத அங்கத்தவர்கள் குறித்து;
தொடர்ந்தும் சம்மேளன கூட்டங்களுக்கு வருகைதராத அங்கத்தவர்கள் குறித்து அவர்களுக்கு பொதுவான அறிவித்தல் ஒன்றினை முதற்கட்டமாக வழங்குதல் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
சம்மேளனத்தின் ஒழுக்கக்கோவை:
சம்மேளனத்திற்கான ஒழுங்க்ககோவை சபை அங்கத்தவ்ர்களிடையே ஏற்கெனவே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது, அதனடிப்படையில் அதன்மீதான கலந்துரையாடலும் வாக்கெடுப்பும் இன்ஸா அல்லாஹ் எதிர்வரும் கூட்டங்களில் இடம்பெறும் எனத்தீர்மானிக்கப்பட்டது.
கடந்த கூட்ட அறிக்கை:
ஜூன் மாத சம்மேளனத்தின் கூட்ட அறிக்கையின் பிரதிகள் சபையோரிடம் பகிர்ந்தளிக்கப்பட்டது, அதனைத்தொடர்ந்து ஏதேனும் திருத்தங்கல் இருப்பின் முன்வைக்கும்படி கூறப்பட்டது.
சமத்துவத்துக்கான யாழ் சிவிம் சமூகத்தின் சார்பாக சகோ.சர்மிளா அவர்கள் தமது நிறுவனத்துக்கும் சம்மேளனத்தின் செயலாளருக்கும் இடையில் நிகழ்ந்த கொடுக்கல்வாங்கள் தொடர்பான விடயம் சம்மேளனத்தின் அறிக்கையில் இடம்பெறத்தேவையில்லை என்ற கருத்தை முன்வைத்தார், இருப்பினும் அது எதற்காக அங்கே இடம்பெற்றது என்பதை சட்டத்தரணை றமீஸ் அவர்கள் விவரித்தார். அதன்பின் ஏனைய திருத்தங்கள் எதுவும் இன்றி சம்மேளனத்தின் ஜூன் மாத கூட்ட அறிக்கை சபையோரால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது அதனை சகோதரர் எம் ஜீ பஸீர் பிரேரிக்க சகோதர அமீன் அவர்கள் ஆமோதித்தார்கள்
நியமனங்கள்:
சம்மேளனத்தின் நிதிப்பொருப்பாளராக சகோதரர் எம்.யூ.எம்.தாஹிர் அவர்களை சகோதரர் அமீன் பிரேரிக்க சகோதர் தையுப் ஆமோதித்தார், சபையோரின் ஏகோபித்த அங்கீகாரத்துடன் சகோதரர் எம்.யூ.எம்.தாஹிர் அவர்கள் சம்மேளனத்தின் நிதிப்பொருப்பாளராக நியமிக்கப்பட்டார்
அடுத்துவரும் இரண்டு மாதங்களுக்கான தலைவர்தெரிவு
அடுத்துவரும் இரண்டு மாதங்களுக்கான தலைவராக சகோதரர் ஜாமால் மொஹிடீன் அவர்களை சகோதரர் எம்,ஜீ.பஸீர் அவர்கள் பிரேரிக்க சகோதரர் சட்டத்தரனி ரமீஸ் அவர்கள் வழிமொழிந்தார்கள், இது சபையோரால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.
நிதிசார் விடயங்கள்
சம்மேளனத்தின் அங்கத்துவ அமைப்புகள் மாதாந்தம் 1000ரூபாவை சந்தாவாக வழங்கும் அதேவேளை, தனிப்பட்ட அங்கத்தினர்கள் தலா 200ரூபாவை மாதாந்தம் சம்மேளனத்திற்கான சந்தாவாக வழங்குவார்கள்.
சம்மேளனத்திற்கான மாதாந்த உணவு மற்றும் காகிதாகிகள் செல்விற்கென 8750ரூபாவை சமத்துவத்திற்கான யாழ் சிவில் சமூக அமைப்பு வழங்குவதாக அதன் தலைவர் சகோதரர் சுனீஸ் சபையில் அறிவித்தார். இதனை சபையோர் வரவேற்றனர்.
சம்மேளனத்தின் மாதாந்த கூட்ட அறிக்கை அங்கத்த்வர்களுக்கு கிடைக்கச்செய்வதற்காக தாபால் செலவினமாக மாதந்தம் 300 ரூபாவை வழங்குவதாக சகோதரர் முபீன் அறிவித்தார். இதனையும் சபை வரவேற்றுக்கொண்டது.
மேற்படி முக்கிய தீர்மானங்களுடன், கிளிநொச்சியில் கூட்டத்தை ஏற்பாடு செய்ய உதவிய அனைத்து சகோதரர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டு, கூட்டம் துஆவுடன் நிறைவு பெற்றது.

No comments:

Post a Comment