வலி.வடக்கு, வடமராட்சி கிழக்கு ஆகிய பகுதிகளில் மீள்குடியமர்த்தப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து உலக வங்கியின் உயர்மட்டக்குழு கடந்தவாரம் நேரடியாகச் சென்று திட்ட மதிப்பீடுகள் குறித்து ஆராய்ந்தது.இது குறித்து தீர்மானங்களை எடுக்கும் விசேட ஆலோசனைக் கூட்டம் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.இந்தக் கூட்டத்துக்கு அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரும் அழைக்கப்பட்டிருந்தார்.
இதன்போது அவர் மீள்குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த விடயங்களை உலக வங்கிக் குழுவிடம் எடுத்துரைத்தார்.அத்துடன் இதுவரை விடுவிக்கப்பட்ட பிரதேசங்களை கட்டியெழுப்ப 2ஆயிரத்து 600 மில்லியன் ரூபா தேவை என்ற திட்ட அறிக்கையையும் அங்கு சமர்ப்பித்தார்.இந்தப் பகுதிகளில் உலக வங்கிக் குழு மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment