யாழ்ப்பாணம், காங்கேசன்துறை துறைமுகத்தை இந்தியாவின் உதவியுடன் அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான உடன்படிக்கை விரைவில் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வேலைத்திட்டம் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படவுள்ளது.
கடந்த யுத்த காலத்தின் போது, காங்கேசன்துறை துறைமுகம் கைவிடப்பட்டிருந்தது.
இலங்கைக்கு காணப்படுகின்ற 10 கடல் வழி உட்காவுகை வாயில்களில், காங்கேசன்துறை துறை முகமும் ஒன்றாக காணப்படுகிறது.
இந்த துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகள் நிறைவடைந்த பின்னர், இந்தியாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் வடக்கில் இருந்து தெற்குக்கான பொருள் மற்றும் பயணிகள் பறிமாற்றத்துக்கும் இந்த துறைமுகம் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment