யுத்தம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டதில் இருந்து இந்த மாதம் வரையிலான இரண்டு வருட காலப்பகுதியில் வடமாகாணத்தில் 38 ஆயிரத்து 277 பேருக்கு 4 ஆயிரத்து 97 மில்லியன் ரூபா கடனாக வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
இலங்கை மத்திய வங்கியின் தலைமை அலுவலகத்தில் கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் இந்த நாட்டில் முடிவடைந்ததாக இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்டது. அந்தக் காலப்பகுதியிலிருந்து 2011 ஆம் ஆண்டு மே மாதம் வரையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் வடக்குக் கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகப் பல்வேறு பட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த இரண்டாண்டு காலப் பகுதியில் வடமாகாணத்தில் 38 ஆயிரத்து 277 பேருக்கு 4 ஆயிரத்து 97 மில்லியன் ரூபா கடன் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தினூடாகப் 13 ஆயிரத்து 980 பேருக்கு ஆயிரத்து 903 மில்லியன் ரூபா கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாயக் கடனாகப் 19 ஆயிரத்து 502 மில்லியன் ரூபா விநியோகிக் கப்பட்டுள்ளது.
வறுமை ஒழிப்புத்திட்டத்தின் ஊடாக 4 ஆயிரத்து 133 பேருக்கு 210 மில்லியன் ரூபா கடனாக வழங்கப்பட்டுள்ளது. மாகாண அபிவிருத்திக் கடன் திட்டத்தினூடாக 640 பேருக்கு 378 மில்லியன் ரூபா நிதி விநியோகிக்கப்பட்டுள்ளது. கால் நடை அபிவிருத்திக்காக 492 பேருக்கு 64 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது . மற்றும் சுபீட்சத்துக்கான கடன் திட்டம் மூலமாக 47 பேருக்கு 40 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள் ளது. இதேவேளை, இதே இரண்டு வருட காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் 26 ஆயிரத்து 577 பேருக்கு 2 ஆயிரத்து 170 மில்லியன் ரூபா கடன் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment