கடந்த கால யுத்தம் காரணமாக வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து வெளிநாடுகளிலும் வெளிமாவட்டங்களிலும் வாழ்ந்தவர்களில் சிலர் தற்போது தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி மீளக்குடியேற முயற்சித்து வரும் நிலையில் இவர்கள் தமக்கு புதிதாக தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க கிராம சேவையாளர்களுடன் தொடர்பு கொண்டால் அவர்கள் பல்வேறு கேள்விளைக் கேட்டு விண்ணப்பப்படிவங்களைத் தர மறுப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வாக்காளர் இடாப்பில் பெயர் இருக்க வேண்டும் அல்லது குடியிருந்ததற்கு உரிய ஆவணம் தேவை என்று கூறப்படுகின்றதாம். குறிப்பாக இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய அகதிகளுக்கு இவ்வாறு தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
இதேபோல மீளக்குடியேறும் இவர்களில் சிலர் தமது பழைய வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை மீளப்பெறுவதற்கும் அல்லது அந்த வங்கிக் கணக்கைத் தொடர்ந்து செயற்படுத்த முடியாதிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
சில வங்கிகளில் பழைய வங்கிக் கணக்கு மூடப்பட்டுள்ளது. ஆவணங்களைத் தேட வேண்டும் என்றும் வங்கி உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே தமக்கு இவ்வாறான தடைகளை நீக்கி தமது கருமங்களை மேற்கொள்வதற்கு அதிகாரிகள் உதவ வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
No comments:
Post a Comment