யாழ்நகர் நிருபர் : ஜப்பானிய பொருளாதார ஒத்துழைப்பு நிறுவனமான ஜெய்க்காவின் நிதியுதவியுடன் யாழ்ப்பாணம் குருநகர் கடல் இயந்திரவியல் கல்லூரிக்கு ஐம்பது மில்லியன் ரூபா செலவில் புதிய இருமாடிக் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுவருகின்றது. கட்டிடவேலைகள் செப்டெம்பரில் பூர்த்தியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டிட வேலைகளை நேரில் அவதானித்த கொழும்பு சமுத்திரவியல் கல்லூரி பணிப்பாளர் நாயகம் எம்.நாணயக்கார கட்டிடவேலைகள் பூர்த்தியானதும் யாழ்ப்பாணத்தில் மேலும் சில கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படுமென கூறினார். கல்லூரிக்கு கணினி உட்பட பல பொருட்களையும் அவர் வழங்கினார். இங்கு பயிற்சி பெறுபவர்களுக்கு கொழும்பு தங்காலவிலும் பயிற்சிவழங்கப்படுமென்றார்.
No comments:
Post a Comment