Friday, May 6, 2011

தொழிற்பயிற்சி அதிகார சபையினால் வேலை வாய்ப்புக்கான கருத்தரங்கு

 தேசிய தொழிற்றகைமைச் சான்றிதழ் வழங்கும் இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகாரசபையின் யாழ்.கிளை கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை, உயர்தரப் பரீட்சைகளில் சித்தியடையாதவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பினை வழங்குவதற்கான கருத்தரங்கொன்றினை நடத்தவுள்ளது.

இக்கருத்தரங்கு எதிர்வரும் 11 ஆம் திகதி புதன்கிழமை காலை 10 மணிக்கு இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபையின் கைதடி பயிற்சி நிலைய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில் இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபையின் யாழ்.கிளை நடைமுறைப்படுத்தவிருக்கும் உயர்தொழிற்பயிற்சி கற்கை நெறியில் மாணவர்களை இணைத்துக்கொள்ள முன்பதிவுகள் இடம்பெறவிருப்பதால் அனைத்து மாணவர்களையும் கலந்து கொள்ளுமாறு யாழ்.கிளை இணைப்பாளர் இரா.அகிலன் வேண்டியுள்ளார்.

இப்பயிற்சி நெறியில் யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த வெளிமாவட்டங்களில் வசிப்போரும் கலந்துகொள்ளும்படியும், யாழ்ப்பாணத்தில் ஏற்படுத்தப்படப்போக்கும் புதிய வேலைவாய்ப்புகள் தொடர்பாக அறிந்துகொள்ளும்படியும் யாழ் மாவட்ட முஸ்லிம்களை சம்மேளனத்தின் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.

அஸ்மின் அய்யூப்-
பொதுச்செயலாளர், யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம்

No comments:

Post a Comment